ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த்.


கில்லி ரிலீஸின் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான்.. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்
இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து ருக்மிணி வசந்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
காந்தாரா
ருக்மிணி வசந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

இந்த நிலையில், காந்தாரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகை ருக்மிணி வசந்த் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


