சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைந்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நள்ளிரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விரைந்து சென்ற சஜித்
இந்தநிலையில், நேற்றையதினம் இரவும் அவரைப் பார்வையிட பெருமளவிலான அரசியல்வாதிகள் சிறைச்சாலையை நோக்கிப் படையெடுத்த போதிலும் அவரைப் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலை வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார்.

