மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள திகதி குறித்து முடிந்தால் பகிரங்கமாக அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயற்படத் தயாராக இருக்கின்றோம்.
அரசாங்கத்திற்கு சவால்
அதன்போது, அந்தந்தக் கட்சிகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படத் தயாராக உள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள எங்கள் கட்சி தயாராகவே உள்ளது.
அரசியல் மற்றும் சமூக சேவை செயற்பாடுகள் ஊடாக நாங்கள் பொதுமக்களுடனான உறவை வலுவாகவே பேணிக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போகின்றதா? இல்லையா என்பது குறித்து தெரியாது.
அவ்வாறு நடத்துவதாயின் தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதி குறித்து பகிரங்கமாக அறிவிக்க முடியுமா என்று அரசாங்கத்திடம் சவால் விடுக்கின்றேன் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.