குற்றப் புலனாய்வு பிரிவினர் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் (Patali Champika Ranawaka) விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விசாரணைக்காக நாளைய தினம்(29) குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் அண்மையில் ஆற்றிய உரையொன்றில் தெரிவித்த விடயம் தொடர்பில் இதன்போது விசாரணை நடத்தப்பட உள்ளது.
ரணவக்கவிற்கு அறிவிப்பு
இதேவேளை நாளைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு சம்பிக்க ரணவக்கவிற்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/sampika-ranavaka-who-was-called-to-the-cid-1714384916

