கடந்த அரசாங்களில் செய்த தவறுகளை தட்டிக்கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள், உங்களால் முடியாவிட்டால் கூறுங்கள் நாங்கள் அடுத்த அரசாங்கத்தை பார்க்கின்றோம் என
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(5) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள்ளே காணிகளுக்கு ஒப்பம் வழங்குவதற்கே மாநகரசபை பின் நிற்கிறார்கள்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அபிவிருத்திகுழு தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிள்ளையான் , மட்டக்களப்பில் பிடித்த காணிகளுக்கு ஒப்பம் வழங்கியிருக்கிறீர்கள் என சாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,