தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் நேற்றையதினம்(14.05.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டுமே ஒழிய எந்தவொரு அரசியல் கட்சியும் தீர்மானிக்க கூடாது.
தண்டனை
தமிழின படுகொலைக்கான நியாயம் ஒரு போதும் உள்நாட்டுக்குள் கிடைக்காது.

எனவே, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழின படுகொலையை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

