சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் பற்றி மற்ற எல்லோருக்கும் எப்போது தான் தெரிய வரும் என்பது தான் சீரியல் ரசிகர்கள் எல்லோரிடமும் தற்போது இருக்கும் கேள்வி.
ஆனந்தி அதை பற்றி யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்து வருகிறார். ஆனால் அன்பு மற்றும் அவரது அம்மா திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர்.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் புது கதாபாத்திரமாக சீரியலில் நுழைந்து இருக்கும் துளசி தான் தற்போது இந்த பிரச்னையை தீர்க்க போகிறார் என காட்டப்பட்டு இருக்கிறது.
அன்பு சொன்னதை கேட்டு அவர் ஆனந்தியை சந்திக்க வருகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம். ப்ரோமோவை இதோ பாருங்க.

