சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு – ஆனந்தி திருமணத்திற்கு பின் நடந்த பிரச்சனைகள் ஒருவழியாக அடங்கி இருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் வந்த அன்பு தற்போது மீண்டும் அவரது அம்மா உடனேயே சென்றுவிட்டார். ஆனந்தி வழக்கம்போல ஹாஸ்டலில் இருந்து வருகிறார்.
மேலும் அன்பு மற்றும் ஆனந்தி என இருவரும் கம்பெனிக்கு வழக்கம் போல வேலைக்கும் வர தொடங்கிவிட்டனர்.
திருமணம் ஆனதை கொண்டாடும் விதமாக எல்லோருக்கும் பிரியாணி போடுவதாக அன்பு மற்றும் நண்பர் கூறுகின்றனர். ஆனால் அதை தான் திருமணமாகவே பார்க்கவில்லை, எனக்கு நடந்த ஏமாற்றம் அது என சொல்லி ஷாக் கொடுக்கிறார் ஆனந்தி.


ராதிகா சரத்குமார் வீட்டு விசேஷம்.. கலந்துகொண்ட பிரபலங்கள்! போட்டோ இதோ
மகேஷுக்கும் நோஸ்கட்
அதன் பின் மகேஷ் வந்து ஆனந்திக்கு ஒரு முக்கிய பதவி கம்பெனியில் கொடுப்பதாக அறிவிக்கிறார். அதை மற்றவர்கள் எல்லோரும் கைதட்டி பாராட்டுகிறார்கள். ஆனால் ஆனந்தி கடும் கோபமாக ‘எனக்கு பதவி எல்லாம் வேணாம் சார்’ என சொல்லி மகேஷுக்கு நோஸ்கட் கொடுக்கிறார்.
அதை கேட்டு மகேஷும் ஷாக் ஆகிறார். ப்ரோமோவை பாருங்க.

