சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பணப் பிரச்சனை கதைக்களம் நகர்கிறது.
வீட்டிற்கு வந்த மனோஜிடம் மருத்துவமனையில் ஆன செலவு பில்லை கொடுக்கிறார் முத்து.
இதென்ன மருத்துவ செலவு செய்துவிட்டு பணம் கேட்கிறான், நான் தள்ளிவிட்டவர்களுக்கு எல்லாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும் இப்படி அவர் சிகிச்சைக்கு ஆன செலவு பணத்தை கேட்டதற்கு ஏதேதோ கூறுகிறார் மனோஜ்.
அப்படி நிறைய பேச்சு வார்த்தைக்கு பின் அண்ணாமலை, மனோஜிடம் பணத்தை கொடுக்கும் வழியை பார் என்று கூறிவிட்டு செல்கிறார்.
அதோடு ஸ்ருதி அம்மா ரெஸ்டாரன்டில் செய்த கலாட்டாவும் நகர்கிறது.
புரொமோ
எனது மகள் வேலைக்கு போக கூடாது, அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமா அதை இந்த செக்கில் எழுதிக்கொள்ளுங்கள் என கூறுகிறார். அந்த செக்கில் முத்து ரூ. 50 கோடி வரை பில் செய்கிறார்.
இதனால் ஸ்ருதி அம்மா என வீட்டில் உள்ள அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
View this post on Instagram