ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, கட்சியின் அநுராதபுரம் மாவட்ட செயற்குழு முகாமையாளர் நிஹால் கொடிதுவக்கு உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பலரும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
பட்டியல் ஆசனங்கள்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்படும் போது அநுராதபுரம் நகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இந்திக அருண குமாரவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வாய்ப்பொன்றை வழங்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அநுராதபுர மாவட்டத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதுடன் கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கியிருக்கப்போவதாகவும் அநுராதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் தலைமைத்துவத்துக்கு அறிவித்துள்ளனர்.