முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு சபாநாயகர் வாழ்த்து

இலங்கையின் புதிய நிறைவேற்று ஜனாதிபதியுடனான புதிய பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்,

தமது நாட்டை எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக அவர்கள் வெற்றிபெறுவதற்கு நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது வாக்குகளை மிகவும் அமைதியான முறையில் பயன்படுத்தியிருப்பதன் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது தனது அவதானிப்பு.

 

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு சபாநாயகர் வாழ்த்து | Speaker Congratulates President Anura Kumara 

மோசமான தேர்தல் வன்முறைகள்

மோசமான தேர்தல் வன்முறைகள் இன்றி இதுபோன்ற பெறுபேற்றைப் பெற்றமைக்கான கௌரவம், வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்த எமது ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு, முப்படையினர், பொலிஸார் தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர், பொது மக்கள் ஆகியோருக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த உண்மையான வெற்றி .

அநுர குமார திசாநாயக்க மீது மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கை ஒரே இரவில் ஏற்பட்டதொன்றல்ல என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நீண்டகாலம் ஈடுபட்டதனால் ஏற்பட்ட விளைவின் பலன் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு சபாநாயகர் வாழ்த்து | Speaker Congratulates President Anura Kumara

தற்பொழுது அவர் முன்னிலையில் காணப்படுவது இலகுவான சவால் அல்ல என்பதுடன், எமது சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பின் மாறுபாடுகளை நன்கு அறிந்திருந்தாலும், உலகளாவிய பூகோள அரசியல் போக்குடன் முரண்படாமல் திசாநாயக அவர்களுக்கு இந்த நீண்டகாலப் பயணத்தை நிலையான முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாடு உள்ளது என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் இலங்கை ஆரம்பிக்கும் இந்தப் புதிய பயணத்திற்கு தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சபாநாயகர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகிய நாடாளுமன்ற செயலாளர் குழாமும், இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.