முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) பிற்பகல் சிறப்பு அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்டபெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
கலந்து கொண்டோர்
அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் பழனி திகாரம்பரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.