வரி விகிதங்களை மேலும் குறைப்பதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் தொடர்பாக
எதிர்வரும் ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குள் அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலை
இலங்கை எதிர்பார்க்கிறது என பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ
அறிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் தனது
திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், கருத்துக்காகக் காத்திருப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நிலையான பேச்சுவார்த்தைகள் மூலம் வரி விதிப்பை 44 சதவீத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைத்தோம்.

சாதகமான முடிவு
பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது எனவும் இலங்கைக்கு
சாதகமான முடிவொன்று கிடைக்கப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

