முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த கொண்டுள்ள நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தர்தல் மிகவும் முக்கியத்துவம வாய்ந்தது. எம்மிடம் இருந்து விலகிச் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவை ஆதரித்து பெலியத்தை நகரில் நேற்றையதினம் (11) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று எழுச்சிப் பெற்றுள்ளது. வைராக்கிய அரசியல் இல்லாத நாட்டை முன்னேற்றும் பொறுப்பு எமக்கு மாத்திரமே உள்ளது. சிறந்த தரப்பினர் எம்முடன் உள்ளார்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்.

மகிந்த கொண்டுள்ள நம்பிக்கை | Sri Lanka Presidential Election 2024

இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. 30 வருட கால யுத்தத்தால் நாடு பின்னோக்கிச் சென்றது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்தோம். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம்.

நாடு முன்னேற்றமடையும் போது 2015 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டோம். இந்த அரசியல் சூழ்ச்சி இன்றும் முடிவடையவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பல்வேறு வழிகளில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் எமது அரசாங்கம் பெற்ற கடன்களை விட  நான்கு மடங்கு கடன்களை பெற்றது. பெற்றுக் கொண்ட கடன்கள் செலுத்தப்படவில்லை. அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது.

மகிந்த கொண்டுள்ள நம்பிக்கை | Sri Lanka Presidential Election 2024

நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்றுணிவு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்சவால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.

தாய் நாட்டு மீது பற்றுக் கொண்டுள்ள முற்போக்கான மக்கள் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். நாமல் ராஜபக்சவால் மாத்திரமே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.