முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அதிபயங்கரமானது, அது ஜனநாயகத்துக்கும் அடிப்படை உரிமைக்கும்
எதிரானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuthu Srinesan) தெரிவித்துள்ளார்.

பயங்கவாத தடைச்சட்ட
நீக்கப்டுவது தொடர்பில் கடந்த ஆட்சிக்காலங்களிலிருந்து பேசப்பட்டு
வரப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரமானது அது பல அப்பாவி மக்களை
குற்றவாளிகளாக்கியது, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது, அப்பாவிகளின் உயிர்களையும் குடித்தது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி | Srinesan Opinion On Prevention Of Terrorism Act

அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்காக சித்திரவதைகள் மூலமாக ஒப்புதல் வாக்கு
மூலத்தைப் பெறுவதற்கு உதவியது பல தமிழர்களை நடைப் பிணங்களாக மாற்றியது.

மனிதகுலம் வெட்கித் தலை குனியக் கூடிய அனைத்துக் கொடூரங்களையும் அச்சட்டம்
செய்தது இப்படியான கொடூரச் சட்டம் தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டது.

ஆனால் 45 ஆண்டுகளாக நிலையாக நிற்கின்றது.

இடையிலான வேறுபாடு

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் அந்த சட்டத்தை நீக்க அதிகாரவர்க்கத்தால் முடியவில்லை அண்மையில், ஆட்சிப்பீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப் போவதாக தேர்தல் பிரசாரங்களின் போது கூறியது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி | Srinesan Opinion On Prevention Of Terrorism Act

அதனைச் செய்வதன் மூலமாக இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது அதனைச் செய்யாது தவிர்த்தால் பச்சை, நீலக்
கட்சிகளின் பாதைகளில் பயணிக்கும் கட்சியாகவே சிவப்புக்கட்சியும்
அமைந்துவிடும்.

அதாவது ஐக்கிய தேசியக்கட்சி,சிறிலங்கா சுதந்திரக்கட்சி,பொதுசனப் பெரமுன போன்ற
கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லாமல்
போய்விடும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் 

இதனை உணர்ந்து தேசியமக்கள் சக்தி செயற்பட வேண்டும் அத்தோடு பயங்கரவாத தடைச்சட்டத்தால்
நாடு அழிவுப்பாதையை நோக்கியே சென்றது இதனை தேசிய மக்கள் சக்தி புரியாது விட்டால், நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் ஜேவிபியினரின் உயிர்களையும் குடித்திருந்தது என்பதை தேசிய மக்கள் சக்தி நன்கறியும் அத்தோடு அதிகார இருப்பால் அதனை மறக்க முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய எம்.பி | Srinesan Opinion On Prevention Of Terrorism Act

மறைந்த
உறவுகளையும் நினைவேந்தத் தடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அடிப்படை
உரிமைக்கு விரோதமானதாகும் அண்மையில் நினைவேந்தல் செயலால் மூன்று தமிழர்கள்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை கண்டனத்திற்குரிய
விடயமாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதையில் சறுக்கல் ஏற்படக்கூடாது கைதானவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.