மட்டக்களப்பு(batticaloa) வாகரை காவல்துறை பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் இன்று புதன்கிழமை (12) கரையொதுங்கிய நிலையில் போயா என அழைக்கப்படும் பாரிய ராங்கி ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
குறித்த கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய ராங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரைசேர்த்துள்ளனர்.
கிழக்கு கடற்கரையில் ஒதுங்கும் ராங்கிகள்
இவ்வாறு கரை சேர்த்த ராங்கியையே மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அண்மைக்காலமாக இவ்வாறான ராங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கிவருவது குறிப்பிடத்தக்கது.