ரஷ்யா – கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இன்று அதிகாலை இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சக்தி வாய்ந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 சுமார் கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கம்சட்கா பகுதியில் கடந்த வாரம் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் உட்பட தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது