வடக்கு மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அரசாங்கத்தை தான் எச்சரித்திருந்ததாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று(27.05.2025) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பாக வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே நான் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.
அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்பதை குறித்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,

