இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர் இயக்கும் படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அடுத்து சுந்தர்.சி நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தினை இயக்க இருக்கிறார். அதன் பூஜை கடந்த மார்ச் 6ம் தேதி நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில்..
இந்நிலையில் இன்று தனது திருமண நாளுக்காக சுந்தர் சி பழனி முருகன் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
முடி காணிக்கை செலுத்த அவர் மொட்டை அடித்து இருக்கிறார். கோவிலில் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் இதோ.