முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கஜேந்திரகுமார் எம்.பி. கூறுவது உண்மையல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது, சுவிஸ் அரசு சமஷ்டித் தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிய கருத்து உண்மையல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது
சுவிஸ் அரசு சமஷ்டித் தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

யாப்பு சீர்திருத்தம்

ஆனால் உண்மை அதுவல்ல, அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களை
சுவிஸ் அரசு அழைத்தது சமஷ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே
தவிர, வேறு வேறு எதற்கும் அல்ல.

கஜேந்திரகுமார் எம்.பி. கூறுவது உண்மையல்ல - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Criticizes Gajendrakumar Mp

அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. அரசை சேர்ந்தவர்கள்.
எனவே, அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய
ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக
முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால்,
அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள்
முன்னெடுக்கவில்லை.எனவே, இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக்
கொள்ள வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டம்

அத்துடன் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்தி எமக்கு கிடைக்கின்ற
குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை
மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கஜேந்திரகுமார் எம்.பி. கூறுவது உண்மையல்ல - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Criticizes Gajendrakumar Mp

ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நாங்கள் அதிலே போட்டியிடுவோம்,
தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர்.

எனவே,
இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை.

மேலும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன்
செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டுள்ளன. அது
தொடர்பான அவர்களது கருத்துருவாக்கத்தில் தான் ஏதோ தவறு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.