ராம் சரண்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பெத்தி. இப்படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்கி வருகிறார். மேலும் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளிவந்து இந்தியளவில் டிரெண்ட் ஆனது. அதிலும் ராம் சரண் வித்தியாசமான வகையில் கிரிக்கெட் ஆடியது ரசிகர்களிடையே படுவைரலான நிலையில், அதே போல் பலரும் ரீல்ஸ் செய்து அசத்தினார்கள்.

அஜித்துடன் அது நடந்தால், அடுத்த நாள் ஊருக்கு போய்டுவேன்.. பிரபலம் கூறிய ஷாக்கிங் தகவல்
ஸ்வாசிகா
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து. இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்வாசிகா.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெத்தி திரைப்படத்தில் ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க தன்னை கேட்டதாகவும், அதற்கு நோ சொல்லியதாகவும் கூறியுள்ளார்.

இதில், “அம்மாவாக நடிக்க எனக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. அதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க கேட்டதுதான். பெத்தி என்கிற படத்திற்காகத்தான் கேட்டார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் அது. ஆனால், நான் நோ சொல்லிவிட்டேன். இப்போது நான் ராம் சரண் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நேரம் வரும்போது நான் நடிக்கிறேன்” ஸ்வாசிகா என கூறியுள்ளார்.

