இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான
முக்கிய சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில்
ஆரம்பமாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பதுகுறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர்
சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும்
பங்கேற்றுள்ளனர்.

