எல்லை தாண்டிய கடற்றொழில் விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..
மேலும், இந்த வாரம் இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
Source: https://tamilwin.com/article/tamil-leaders-ignored-seafarers-issues-1719133594

