யாழ். தையிட்டி விகாரை நிலப்பரப்பிலும் பல மனித உடலங்கள் இருப்பதாக எமக்கு சந்தேகம் இருக்கின்றது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கெல்லாம் இராணுவ முகாம்களுக்காக காணிகள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மனித புதைகுழிகள் இருக்கலாம்.
உதாரணமாக தையிட்டி விகாரையில் கூட அவ்வாறு மனித உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என எங்களுக்கு சந்தேகம் உள்ளது” என்று கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

