உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை நெருங்கிவிட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறிருக்க, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்து விட்டு வந்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, அடைப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பிள்ளையானுடன் விவாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குறித்த மனு நாளையதினம் (31.10.2025) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் மூலம் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருந்தால் இன்னும் பலர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

