மாத்தறை, தெய்வேந்திரமுனை தேவாலயத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்னர்.
பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள்
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மோதலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


