சிறைச்சாலை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்தாகவும் இதற்காக போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாகவும் துசார உபுல்தெனிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 2 மில்லியன் ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணைகளிலும் துசார பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் எந்தவொரு சிறைச்சாலைக்கு உள்ளும் துசார உபுல்தெனிய பிரவேசிக்கக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.