எல்பிட்டியவின் உரகஸ்மன்ஹந்திய பகுதியில் இன்று (04) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஒருவரை குறிவைத்து முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாள் கேட்ட துப்பாக்கிதாரிகள்
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த குழு, வீட்டில் இருந்த நபரிடம் வாள் கேட்டதாகவும், அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீட்டில் இருந்த நபர் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் பெலிகஸ்வெல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய திருமணமானவர்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


