அது ஒரு இரகசிய வதை முகாம்.
சிறிலங்கா கடற்படையின் ‘Black Ops Unit’ என்ற சிறப்பு பிரிவால் இயக்கப்பட்டது
இறுதி யுத்ததில் சரணடைந்த, அல்லது கைப்பற்றப்பட்ட அல்லது
கைதுசெய்யப்பட்ட தமிழர் தரப்பின் பல முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அந்த இரகசிய நிலக்கீழ் சித்திரவதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.
அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவருக்கும் வாரத்தில் நான்கு தடவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட சித்திரவதைகள் இடம்பெற்றன.
அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்கள், சிறுவர்கள் மீதும் மிகக் கடுமையான பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றன.
அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் கண்கள், கைகள் கட்டப்பட்டநிலையில் அழைத்துச் செல்லப்படுவார்கள்… கதறக் கதற துன்புறுத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார்கள்.
அந்த சித்திரவதை முகாம்களை நடாத்தியவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது..
பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன…
அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன தமிழ் அரசியல்தலைமைகள்..
இந்த இரகசிய சித்திரவதை முகாம் பற்றிய ஆதாரங்களையும், பல்வேறுபட்ட சுயவிமர்சனங்களையும் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி