கடந்த முதலாம் திகதி ரஷ்யா மீது உக்ரைன் (Ukraine) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் என்பது மிக மிக வெற்றிகரமான தாக்குதல் என்பதுடன், ரஷ்யாவுக்கு (Russia) பாரிய விமான இழப்புக்களை ஏற்படுத்திய ஒரு தாக்குதல் என்பது யாவரும் அறிந்ததே.
அந்தத் தாக்குதல்களினால் ரஷ்யா 41 சக்திவாய்ந்த யுத்தவிமானங்களை இழந்து விட்ட அதேவேளை, அந்த விமான இழப்புக்களைக் கடந்து மற்றும் சில முக்கியமான பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மிக முக்கியமான பேச்சுவார்தைகள் துருக்கியில் நடைபெற இருந்த தறுவாயில்தான் உக்ரைன் ரஷ்யா மீது அந்த அதிரடித்தாக்குதலை நடாத்தியிருந்தது.
துருக்கியில் நடைபெறவிருந்த அந்தப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனை கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் சரணடையும்படியான நிபந்தனைகளை விதிப்பதற்கு ரஷ்யத்தரப்பு தயாராகிவிட்டிருந்த நிலையில்தான், உக்ரைனின் அந்தத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
துருக்கியில் இடம்பெற இருந்த பேச்சுவார்தையில் ரஷ்யாவின் பேரம்பேசும் பலத்தை முற்றாகவே சிதைத்துவிட்டிருந்த அந்தத் தாக்குதலின் மற்றொரு பக்கம் பற்றி ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழச்சி,
https://www.youtube.com/embed/6LH9iRcAn8Q?start=130

