முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் தொடரும் சோதனைகள் : பாவனைக்கு பொருத்தமற்ற தானியங்கள் மீட்பு

கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள், மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப்பண்டங்கள் சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (20) முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனைகளிலேயே மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பழுதடைந்த தானியங்கள்

அதன்படி நேற்று (20) சாய்ந்தமருது பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

மட்டக்களப்பில் தொடரும் சோதனைகள் : பாவனைக்கு பொருத்தமற்ற தானியங்கள் மீட்பு | Unfit Grains Caught In Raid In Batticaloa

இதன்போது பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள், மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப்பண்டங்கள் சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கை

மேலும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார வைத்திய அதிகாரி, உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கினார்.

மட்டக்களப்பில் தொடரும் சோதனைகள் : பாவனைக்கு பொருத்தமற்ற தானியங்கள் மீட்பு | Unfit Grains Caught In Raid In Batticaloa 

அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடவடிக்கை இடம் பெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.