இலங்கையின் மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர்
பதவிகளுக்கு, தற்போது, வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும்
தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I இல் குறைந்தது ஐந்து
ஆண்டுகள் திருப்திகரமான சேவைக் காலத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி
அத்துடன், தேவையான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும்
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 2025 மார்ச் 3 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று
அமைச்சகம் தெரிவித்துள்ளது.