தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் மான்சிக்னர் பிரையன் உடைக்வேவை (Monsignor Brian Udaigwe) பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(27)அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இராஜதந்திர உறவுகள்
வத்திக்கானுடனான இராஜதந்திர உறவுகளுக்கு 2025 ஆம் ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை வலுப்படுத்துவதில் தூதுவர் உடைக்வே குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.
இந்நிகழ்வு தொடர்பாக பிரதமர் தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு, தூதுவருக்கு நன்றியை தெரிவித்திருந்துள்ளார்.







