இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக வத்திக்கானுக்கு பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), இன்று புனித திருத்தந்தை பிரான்சிஸ்(pope francis) அவர்களுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
வத்திக்கானில்(vatican) உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் இன்று காலை அமைச்சர் விஜித ஹேரத், பாப்பரசருக்கு தனது இறதி அஞ்சலியை செலுத்தினார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக நித்திய இளைப்பாறினார்.
இறுதி நிகழ்வுகள்
அவரின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம்(26) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பைடன், உட்பட உலகின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

