முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலைகாததால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கானது, ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாகவும் தொடரப்பட்டதாகும்.


