இரவில் நகங்களை வெட்ட கூடாது என நமது முன்னோர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
இது முற்றிலும் ஒரு மூட நம்பிக்கை என நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அதற்கு பின்னால் சில உண்மையான காரணங்கள் உள்ளன.
அந்த வகையில், இரவில் நகங்களை வெட்ட கூடாது என்பதற்கு சில ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன.
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஆன்மீக காரணம்
மாலை நேரத்தில் லட்சுமி தேவி நம் வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் நகங்களை வெட்டுவதால் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகைக்கு இடையூறு ஏற்படும் என கூறப்படுகின்றது.
இவ்வாறு மாலை நேரத்தில் நகம் வெட்டுவது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம் எனவும் இதனால் உங்களுக்கு நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர்.
எனவே, இரவில் பணம் கடன் கொடுப்பது, நகங்களை வெட்டுவது, முடி வெட்டுவது, குப்பைகளை அகற்றுவது போன்றவற்றை செய்ய கூடாது என குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் காரணம்
அன்றைய காலக்கட்டத்தில் மின்சாரம் கிடையாது. அத்துடன் நகங்களை வெட்ட உபகரணங்கள் கிடையாது.
அப்போது கத்தியை வைத்தே நகங்களை வெட்டி வந்த நிலையில் குறைந்த வெளிச்சத்தில் நகங்களை வெட்டும்போது, கத்தியில் உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாகவும் இரவில் நகம் வெட்ட வேண்டாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதே போன்று தான் இரவில் நகம் வெட்டும்போது உணவு பொருட்களில் அவை விழுந்துவிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதனாலும் நமது முன்னோர் நகத்தை இரவில் வெட்ட கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.