ராஜபக்சர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன்
இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில்
இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இந மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.
அப்போதே ஊழல்களுக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படும் என நாங்கள் உறுதியளித்திருந்தோம்.
ஆனால், இன்று ரணில் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் செய்தது ஒரு சிறிய குற்றம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
இன்னும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கைதுகளும் எதிர்காலத்தில் இடம்பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,

