கிராண்ட்பாஸ் நாகலகம் சாலையில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 17 ஆம் திகதி கிராண்ட்பாஸில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்தனர்.
சந்தேக நபரின் மனைவி
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விளைவாக, கடந்த 18ஆம் திகதி அன்று பத்தரமுல்ல சிறப்புப் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் விளைவாக, துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் மனைவியான குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.