மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன(chandana abeyratne), தொடர்புடைய சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய வாக்களிப்பு முறை
மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய வாக்களிப்பு முறையை ஏற்றுக்கொள்வதற்கான வரைவு சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.