முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக்
கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(14) மாலை இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது,

வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவசிகுளம்
பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது உறவினர்களுடன் வருகை
தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இதன்போது, அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரை
அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி | Youth Dies After Drowning In Swimming Pool

சம்பவத்தில் கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே
உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் வவுனியா,
சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம்
ஒன்றில் வேலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த குளிரூட்டி கடந்த ஒரு
வாரத்திற்கு மேலாக இயங்காமையால் சடலத்தை அங்கு வைக்க முடியாது எனவும்,
இறந்தவரின் உறவினர்களை வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி செட்டிகுளம்
வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சடலத்தை  ஒப்படைக்குமாறும், மறுநாள்  மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறும் வைத்தியசாலை பிரதிப்
பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப நிலை

இதன்போது, குறித்த குடும்பத்தினர் தமது குடும்ப நிலை காரணமாக சடலத்தை
செட்டிகுளம் வைத்தியாலைக்கு கொண்டு செல்ல, வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத
நிலையில் அவதிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி | Youth Dies After Drowning In Swimming Pool

இந்நிலையில் சம்பவம் தொடர்பில்  வன்னி மாவட்ட ஆளும்
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கவனத்திற்கு குறித்த
விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற
உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், இளைஞரின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன்,
சம்பவம் தொடர்பில் கேடடறிந்த பின் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின்
கவனத்திறகு குறித்த விடயத்தை கொண்டு வந்த நிலையில், வைத்தியசாலையால்
பொறுப்பேற்கப்பட்ட சடலத்தை செட்டிகுளம் அனுப்பி அதனை மீள பெற வேண்டியது
வைத்தியசாலையின் பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.