எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட இளைஞர் குழு ஒன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) இளைஞர் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம்.சீலன் தலைமையிலான
இளைஞர் குழுவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள்
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகிய
இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.