உக்ரைனுக்கு(ukraine)எதிரான போரில் ரஷ்ய(russia) இராணுவத்துடன் இணைந்து 155 சீன (china)குடிமக்கள் போராடுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் இரண்டு சீனர்கள் பிடிபட்டதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன – சீனா, ரஷ்யாவிற்கு மனிதவளத்தை வழங்குவதாக உக்ரனின் முதல் அதிகாரபூர்வ குற்றச்சாட்டை இது குறிக்கிறது.
மோதலில் “இன்னும் பல” சீன நாட்டவர்கள்
புதன்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, தனது அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மோதலில் “இன்னும் பல” சீன நாட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.
“சீனப் பிரச்சினை தீவிரமானது” என்று அவர் கூறினார்.
“கடவுச்சீட்டு தரவுகளுடன் 155 பேர் குடும்பப்பெயர்களுடன் உள்ளனர் – 155 சீன குடிமக்கள் உக்ரைன் பிரதேசத்தில் உக்ரைனியர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய சமூக ஊடகங்களில் சீன குடிமக்களை ஆட்சேர்ப்பு செய்து வருவதாகவும், “அதிகாரபூர்வமாக பெய்ஜிங்கிற்கு இது பற்றி தெரியும்” என்றும் அவர் கூறினார்.
மொஸ்கோவில் பயிற்சி
ஜெலென்ஸ்கியின் கூற்றுப்படி, ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் உக்ரைனில் உள்ள போர்க்களத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மொஸ்கோவில் பயிற்சி பெறுகிறார்கள், அத்துடன் இடம்பெயர்வு ஆவணங்கள் மற்றும் கட்டணத்தையும் பெறுகிறார்கள்.
பிடிபட்ட இரண்டு சீன வீரர்களிடம் விசாரணை நடத்துவது போன்ற ஒரு காணொளியையும் அவர் X இல் வெளியிட்டார்.
இதேவேளை இன்று வியாழக்கிழமை இது தொடர்பில் பதிலளித்த சீன அரசாங்க செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “சீனாவின் பங்கை சரியாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்ளவும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/YNE58w8LPHchttps://www.youtube.com/embed/88giR9IT_5E