வரவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ) மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (23) அன்று தள்ளுபடி செய்தது.
திட்டமிட்டபடி பரீட்சைக்குத் தோற்றவுள்ள மனுதாரர்கள், பரீட்சையை ஒத்திவைப்பது அவசியமானது எனக் கூறி, அதனைத் தாமதப்படுத்துவதற்காக நீதிமன்றத் தலையீட்டைக் கோரியிருந்தனர்.
எனினும், இம்மனுவின் சட்டப்பூர்வத் தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிலையைச் சவாலுக்கு உட்படுத்திப் சட்டமா அதிபர் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்தார். இருதரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை நிராகரித்தது. இதன் மூலம் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.


