வறண்ட மண்டல விவசாயம் குறித்த 11ஆவது சர்வதேச மாநாடு யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்றது.
விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற
குறித்த மாநாட்டில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார்.
சர்வதேச மாநாடு
பேச்சாளராக மஞ்சுளா குலரத்னா லிங்கன் பல்கலைக்கழகம் (நியூசிலாந்து) ,
யுகா சசாகி யமகட்டா பல்கலைக்கழகம் (யப்பான்) ஹிமால் ஏ. சுரவீர பல்கலைக்கழகம் (இலங்கை பேராதனை பல்கலைக்கழகம்) உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

குறித்த. நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விவசாயத்துறை
சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








