முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் – பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் இன்று (27.1.2025) அதிகாலை யாழ்ப்பாணம் – போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். மேலும், குறித்த கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர் | 2 Indian Fishermen Injured In Srilanka Navy Firing

இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில்
சென்று பார்வையிட்டனர்.

அந்தவகையில் கருணநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் தனித்தனியாக
வைத்தியசாலைக்கு சென்று கடற்றொழிலாளர்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர் | 2 Indian Fishermen Injured In Srilanka Navy Firing

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை
கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் (Sri Lanka Navy) நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்
இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய கடற்றொழிலாளர்களுடன் படகொன்று அத்துமீறி
நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டது.

துப்பாக்கி பிரயோகம் 

இந்திய கடற்றொழிலாளர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்வதற்கு கடற்படை வீரர்
முயற்சித்த போது அவரை ஏற்றிக்கொண்டு கடற்றொழிலாளர்களின் படகு
தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர் | 2 Indian Fishermen Injured In Srilanka Navy Firing

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி
பிரயோகத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர்.

மேலும் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க
மறுத்துள்ள நிலையில் காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் நடவடிக்கைகளின்
பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள
திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.