2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை, கணிதப் பிரிவில் வவுனியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.
கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த குகதாசன் தனோஜன் என்ற மாணவரே இவ்வாறு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) சற்று முன்னர் வெளியாகின.
முதல் முறை
இதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம்
மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவர் மூன்று
பாடங்களில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அத்தோடு, தேசிய
ரீதியில் 144 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையின் வரலாற்றில் மாணவர் ஒருவன் முதலாம் இடத்தை பெறுவது இதுவே
முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.