டிசம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15 ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் உடைகள் குறித்து தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா கூறியுள்ளார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் 16.12.2025 அன்று திறக்கப்படும் என்றும் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட 147 பாடசாலைகள் தற்போது திறக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மாகாணங்களால் வழங்கப்படும் எதிர்கால உறுதிப்படுத்தல் எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

