படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்
நிகழ்வுகள் யாழ் . ஊடக அமையத்தில் அமையத்தின்
தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிமலராஜனின் படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான
பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர்,
25 ஆண்டுகள் கடந்து
தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது
சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி
செலுத்தினர்.
போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன்.
பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில்
பணியாற்றி இருந்தார்.
இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரையில்
குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக
அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.