முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மழையுடன் கூடிய பலத்து காற்று காரணமாக யாழில் 45 குடும்பங்கள் பாதிப்பு!

மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம், 45
குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா
தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், ஒரு சிறு மற்றும் மத்திய வர்த்தக
முயற்சியும், 7 அடிப்படை கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

அடிப்படை கட்டமைப்பு

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.

மழையுடன் கூடிய பலத்து காற்று காரணமாக யாழில் 45 குடும்பங்கள் பாதிப்பு! | 45 Families Affected In Jaffna Due To Weather

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இருவர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேதங்கள் 

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சிறு மற்றும் மத்திய முயற்சிகளும்
ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.

மழையுடன் கூடிய பலத்து காற்று காரணமாக யாழில் 45 குடும்பங்கள் பாதிப்பு! | 45 Families Affected In Jaffna Due To Weather

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் 2 அடிப்படை கட்டமைப்புகளும்
சேதமடைந்துள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் பகுதியளவில்
சேதமடைந்துள்ளது.

மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.