இலங்கையை பொறுத்தவரை தொடர்ச்சியான அவலமான மரணங்களின் செய்திகள் அண்மைக் காலமாக வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
நேற்றைய தினத்தில் கூட யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்ததோடு எழுதுமட்டுவாளில் பேருந்துடன் மோதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பலியானார் என செய்திகள் வெளியாகியது.
இவ்வாறாக நாளுக்கு நாள் நிகழும் அப்பாவிகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுகின்றது.
இதேபோல் ஒரு அநியாய மரணத்துள் சிக்கி பலாங்கொடையில் தீயில் கருகிப்போன எட்டு வயது சிறுவனுக்கான நீதியையும் இதன் பின்னால் உள்ள பல உண்மைகளையும் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…